Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2017 ஜன., முதல் 'ஸ்மார்ட் கார்டு

''தமிழகத்தில், 2017 ஜனவரி முதல், 'ஸ்மார்ட் கார்டு' மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படும்,'' என, அரசு முதன்மை செயலர் கோபாலகிருஷ்ணன் பேசினார்.

சேலத்தில், ரேஷன் கடைகளில், மொபைல் போன் மூலம் தகவல் பரிமாற்றம் குறித்து நடந்த ஆய்வுக் கூட்டத்தில், அரசு முதன்மை செயலரும், உணவுப் பொருள் வழங்கல் துறை கமிஷனருமான கோபாலகிருஷ்ணன் பேசியதாவது: தமிழகத்தில், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அனைத்து ரேஷன் கடைகளிலும், அக்டோபர் முதல் ஆன்லைன் பில்லிங்
மிஷின் மூலம், பொருட்களை வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் பில்லிங் மிஷின் பயன்பாட்டினை, சிறப்பாக மேற்கொள்வதற்கு வசதியாக, கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர்கள், இணைப்பதிவாளர்கள், அனைத்து வட்ட வழங்கல் அலுவர்களின் பணி குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆன்லைன் பில்லிங் மிஷின் பயன்பாட்டுக்கு வருவதால், ரேஷன் கடைகளில் வாங்கப்படும் பொருட்களின் விபரம், விலைப்பட்டியல் ஆகியவை உடனடியாக, ரேஷன் கார்டுதாரர்களின், மொபைல் போனிற்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் வந்து சேரும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மென்பொருளை, தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொண்டால், தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடை எப்போது திறந்துள்ளது என்பதை அறிந்து கொள்வதுடன், என்னென்ன பொருட்கள் கையிருப்பில் உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். தற்போது பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுகளுக்கு பதில், 2017 ஜனவரி முதல், அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டுக்கு வரவுள்ளது. அலுவலர்கள் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து, சிறப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive