NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டெட் தேர்வு எழுதாதவர்களுக்கு சம்பளம் நிறுத்துவதா? ஆசிரியர்கள் சங்கம் கேள்வி

*ஆசிரியர் தகுதித் தேர்வு என்னும் டிஇடி(டெட்) தேர்வு எழுதி முடிக்காத ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்வதாக வந்த செய்தியை அடுத்து, அதை கைவிட வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்*
*கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் ஒரு அம்சமாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கமே தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதே. இந்த சட்டம் தமிழகத்தில் கடந்த 2010ம் ஆண்டு அமலுக்கு வந்தது*
*இந்த சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னதாக வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் செய்ய பட்டியல் தயார் செய்து சுமார் 20 ஆசிரியர்கள் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர்*
*அதில் மீதம் உள்ளவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதற்குள், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது*
*அதனால் அந்த தேர்வு அறிவிக்கப்பட்டதற்கு பிறகு பணியில் சேர்ந்வர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாத ஆசிரியர்களின் சம்பளம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது*
*இதையடுத்து ஆசிரியர்கள் அதிருப்தியும் மனஉளைச்சலும் அடைந்துள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை வழங்க வேண்டும் என்று கேட்கின்றனர்*
*இது பெரிய பிரச்னையாக மாறியுள்ளது*
*இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இளமாறன் நேற்று வெளியிட்ட அறிக்கை*
*கடந்த 2011ம் ஆண்டில் தமிழகத்தில் வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில்  இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்*
*அவர்கள் பணியில் சேர்ந்த பிறகு 5 ஆண்டு காலத்துக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு என்னும் டிஇடி தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது*
*தேர்வு எழுதுவதற்கு 10 வாய்ப்புகள் மட்டும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது*
*ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் 3 முறை மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியுள்ளது. இதன்படி ஆசிரியர்களுக்கு முழுமையான வாய்ப்பு வழங்கப்படவில்லை*
*அதே நேரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை என்றுகூறி அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதச் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது*
*இதனால் ஆசிரியர்கள் மன உளைச்சலில் உள்ளனர். குறிப்பாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 8 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 1500 ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது*
*எனவே பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை இயக்குநர்கள் நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக சம்பளத்தை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive