NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.12.21

  

திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்: அரசியல்

அதிகாரம்: ஆள்வினை உடைமை

குறள் எண்: 620

குறள்:
 ஊழையும் உப்பக்கம் காண்பவர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.

சோர்வில்லாமல் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகின்றவர்கள்,
வெற்றிக்குத் தடையாய் வரும் விதியையும் வென்று விடுவார்கள்.

பழமொழி :

Necessity has no law


ஆபத்துக்கு பாவமில்லை

இரண்டொழுக்க பண்புகள் :

1. ஓதாத கல்வி கெடும், ஒழுக்கமில்லா வாழ்வு கெடும். எனவே ஆசிரியர் கொடுக்கும் கல்வி பயின்று ஆசிரியரும் பெற்றோரும் கற்றுக் கொடுக்கும் ஒழுக்க வாழ்வினை வாழ்வேன். 

2. பணத்தால் அமைதி கெடும், கடன் பட்டால் வாழ்வு கெடும் எனவே பண ஆசை இல்லாமல் சரியான முறையில் செலவு செய்து வாழ்வேன்.

பொன்மொழி :

ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.----- சார்லஸ்

பொது அறிவு :

1. கிராம்பு என்பது கிராம்பு செடியின் எந்தப் பகுதி ஆகும்? 

விரியாத மொட்டுப்பகுதி. 

2.வைக்கோலில் உள்ள வேதிப்பொருள் எது? 

லிக்னைன்.

English words & meanings :

Down to earth - a simple practical person, பேச பழக எளிமையானவர். 

Chatter box - someone who talks non stop, ஓயாது பேசுபவர் 

ஆரோக்ய வாழ்வு :

ஒருவர் ஒரு நாளைக்கு 9 மணிநேரத்திற்கு மேல் தூங்கினால், நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுவதாக உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே தினமும் 7-8 மணிநேரத்திற்கு மேல் தூங்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.




கணினி யுகம் :

Ctrl + shift + R - Reply all. 

Ctrl + shift + Q - New meeting request

நீதிக்கதை

விடா முயற்சி

கதை :
ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார். 

பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் குறிப்பிட்டிருந்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள். 

முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை, அப்பா இரண்டடி என்று சொல்வதற்கு பதிலாக ஓரடி என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து, மூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை. 

எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது. இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும் என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே. 

அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் சரி தோண்டியது வீணாக வேண்டாம் என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா? ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம். 

இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள். 

நீதி :
எந்த செயல் எடுத்தாலும் அதை பாதியில் நிறுத்து விடாமல் விடாமுயற்சியுடன் செய்தால் கண்டிபாக பலன் கிடைக்கும்.

இன்றைய செய்திகள்

08.12.21


★பிப்ரவரி மாதத்தில் குரூப்-2, 2A தேர்வுகளுக்கும், மார்ச் மாதத்தில் குரூப்-4 தேர்வுகள் குறித்தும் அறிவிப்பு வெளியாகும். அறிவிப்பாணை வெளியான 75 நாட்களில் தேர்வுகள் நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி.

★சிட்கோ தொழில் மனைகளின் விலை குறைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

★வடகிழக்குப் பருவமழை காரணமாகத் தமிழகத்தில் உள்ள 14,138 ஏரிகளில், 8,690 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் சராசரி மழைப்பொழிவாக 3.6 மி.மீட்டர் பதிவாகியுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

★நாட்டில் இருந்து வரதட்சணை கொடுமையை ஒழிக்க சட்டத்தில் கடும் விதிமுறைகளை கொண்டு வரவேண்டும் என்று தேசிய சட்ட ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

★டெல்டாவைவிட ஒமைக்ரானால் மீள் தொற்றுக்கு மூன்று மடங்கு அதிக வாய்ப்பு: உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தகவல்.

★பிரிட்டிஷ் விளையாட்டு விருதுகள்: இந்த ஆண்டின் சிறந்த வீராங்கனையாக எம்மா ராடுகானு தேர்வு.

★இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான 21 பேர் கொண்ட தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Today's Headlines

★ Group-2 and 2A exams will be announced in February and Group-4 exams in March. The elections will be held within 75 days of the announcement says the TNPSC President in an interview. 

 ★ Reduction in prices of CIDCO industrial estates: Announcement by Chief Minister MK Stalin.

 ★ Out of 14,138 lakes in Tamil Nadu, 8,690 lakes have reached their full capacity due to the northeast monsoon and the average rainfall in 30 districts in the last 24 hours was 3.6 mm, the Tamil Nadu government said.

 ★ The Supreme Court has recommended to the National Law Commission to bring in strict punishments in the law to eradicate dowry cruelty from the country.

 ★ Omicron is three times more likely to cause re-infection than delta: says World Health Organization scientist Sawmiya Swaminathan.

 ★ British Sports Awards: Emma Radukanu selected as this year's Player of the Year.

 ★ The 21 members of South African squad for the Test series against India has been announced. 
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive