Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET நியமனத்தில் தமிழுக்கு துரோகம் செய்யக்கூடாது: ராமதாஸ்

        பட்டதாரி ஆசிரியர்கள் நியமன வரிசையில் தமிழுக்கு முதலிடம் தருவதுடன்,  மாணவர்கள் ஆசிரியர் விகிதத்தை 30:1 ஆக மாற்ற வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
 
          தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர் தேர்வு தொடர்பாக இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட அறிவிப்பு, இப்போது தான் நியமனம் செய்யப்படும் கட்டத்திற்கு வந்திருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியம்  கடந்த வாரம் வெளியிட்ட பட்டியலின்படி, தமிழகத்தில் 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழாசிரியர்களின் எண்ணிக்கை தான் கவலையளிக்கிறது.

          அரசு பள்ளிகளில் நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களில் வெறும் 772 பேர் மட்டுமே தமிழாசிரியர்கள் ஆவர். ஆங்கிலப் பாடத்திற்கு 2822 பேரும், வரலாற்றுப் பாடத்திற்கு 3592 பேரும், அறிவியல் பாடத்திற்கு சுமார் 2,000 பேரும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர். ஆனால், தமிழ் பாடத்திற்கு மட்டும் மிகக் குறைந்த அளவில் 772 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இது இப்போது நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையில் வெறும் 7.21% மட்டுமே.

           ஆனால், வரலாற்று ஆசிரியர்களின் எண்ணிக்கையோ 33.57% ஆகும். அதேபோல்,தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களில்  26.37% ஆங்கிலப்பட்டம் பெற்றவர்கள் ஆவர். அறிவியல் பாடங்களுக்கும், ஆங்கிலப்பாடங்களுக்கு அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தாய்மொழியாம் தமிழ் பொழிக்கு மட்டும் மிகக்குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

      தமிழ் பாடத்திற்கான ஆசிரியர்களில் மூன்றில் இரு பங்கினர் பதவி உயர்வின் மூலமாகவும், ஒரு பங்கினர் மட்டும் நேரடியாகவும் நியமிக்கப்படுவதாக தமிழகஅரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இது உண்மையாக இருக்குமானால், சுமார் 1550 இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி தமிழாசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாக தெரிய வில்லை.

 6 முதல் 8 வரையிலான வகுப்புகளில் தமிழ் பாடம் நடத்த போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாத நிலையில், மற்ற பாடங்களின் ஆசிரியர்களே தமிழ் பாடத்தையும் நடத்துகின்றனர்.

இலக்கிய மற்றும் இலக்கண வளம் கொண்ட தமிழை மற்ற ஆசிரியர்களால் அவ்வளவு எளிதாக நடத்தி விடமுடியாது. அதுமட்டுமின்றி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒரு தமிழாசிரியர், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு ஒரு தமிழாசிரியர் என இரு தமிழாசிரியர்களை நியமிப்பதற்கு பதிலாக ஒரே ஒரு தமிழாசிரியரை மட்டும் நியமிக்கும் நடைமுறையும் உள்ளது.

இதன்மூலம் தமிழாசிரியர் பணியிடங்கள் திட்டமிட்டு குறைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனத்தில் தமிழுக்கு துரோகம் செய்யும் இப்போக்கு தவிர்க்கப்பட வேண்டும்.மேலும் தமிழ்நாட்டில் தாய்மொழியான தமிழுக்கு முதலிடம் தருவது தான் சரியானதாக இருக்கும். எனவே தமிழாசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் நியமிக்கப்படுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.




23 Comments:

  1. அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டியது தமிழ் இன்றும் வாழ்கிறது என்றால் சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் கவிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர் என்ற போர்வையில் இருக்கும் அரசியல்வாதிகளால் என்று அனைவரும் நினைகிறீர்கள் தமிழ் வாழ்வது அந்த தமிழ் கூட எழுத படிக்த் தெரியாத பாமர மக்களால் சேற்றில் கால் கைக்கும் உழவனால் கூலி வேலைபார்க்கும் வியர்வையின் சொந்தங்களால் தான் தமிழ் வாழ்கிறது அவர்கள் தான் பிற மொழிச் சொற்கள் கலப்பு இல்லாமல் ஆங்கில வர்த்தை சிறிதும் இல்லாமல் அந்த பாட்டாளி மக்கள் தான் தமிழ் மொழியில் பேசுகிறார்கள்

    இன்று கிராமங்களால் தான் தமிழ் மொழி அதிகம் பேசப்படுகிறது அவர்களுக்கு தமிழின் அருமைகூட அறியாமல் தமிழில் பேசும்போது
    அதன் அருமையை அறிந்த நாம் நம் வீட்டு பிள்ளைகளை ஆங்கில பள்ளியில் படிக்க வைத்து அவர்கள் அம்மா என்று அழைத்தால் எதோ கெட்ட வார்த்தை போல் அவர்களை பார்த்து உங்கள் பள்ளியில் என்ன சொல்லிக்குடுக்குறாங்க என கேள்வி கேட்கிறோம்

    மம்மி என்று சொன்னால் அந்த குழந்தையை வாரி அனைத்து முத்தம் தரும் மம்மிக்கள் இருக்கும் வரை தமிழை எத்தனை திருவள்ளுவர் வந்து பாடல் எழுதுனாலும் சரி எத்தனை உ.வே.சா வந்தாலும் தமிழை வளர்க்க முடியாது

    தமிழ் மொழி இனி வரும் காலங்களில் பேச்சு வழக்கு மொழியாகத்தான இருக்குமோ தவிற அதுவும் அதிகம் ஆங்கிலம் மற்றும் பிற மொழிச்சொற்களை கலந்து தான் பேசும் மொழியாகத்தான் இருக்கும் மற்றபடி தமிழை வளர்ப்பது கடினம்

    அத்தையையும் ஆங்கிலத்தில் ஆண்டி என்றும் பெரியம்மாவையும் ஆண்டி என்று தான் அழைத்து உறவுகளும் கலாச்சார பழக்க வழக்கங்களும் மறந்து இனி நமது பழம்பெருமை வாய்ந்த மொழியை மறக்கத்தான் போகிறோம் இதற்கு இன்னும் சில ஆண்டுகளே தான்


    பல நுாற்றாண்டுகளை கடந்து வந்த என் தாய் மொழி தமிழ் இன்னும் சில ஆண்டுகளில் அழியக்கூடிய அபாயம் மிக அருகில் வந்து விட்டது

    நமது அடையாளத்தையே இன்னும் சிறிது காலத்தில் அழித்து அடையாளமற்ற மனிதனை பழம்பெருமைகளை இழந்து அடையாளம் அற்ற ஓர் இனமாய் வாழப்போகிறோம்

    என்று கிராமங்கள் அழிந்து அவை நகரங்களை நோக்கி வருகிறோதோ அன்று அழிவுகாலம் தமிழுக்கு ஆரம்பம் இதனை தடுக்க முயற்சித்தாலும் பயன் குறைவு

    ReplyDelete
    Replies
    1. 14.08.14 அன்று நமது பாடசாலை தளத்தில் தமிழ் ஆசிரியர் நியமனம் தொடர்பான கட்டுரை ஒன்றை வெளியிட்டேன்.(link-http://www.padasalai.net/2014/08/tn-tet.html)முதலில் அந்தக் கட்டுரை வெளியிட அனுமதி அளித்தப் பாடசாலை தளத்திற்கு எனது மற்றும் தமிழ் ஆசிரியர்கள் சார்பாக கோடான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



      காரணம் இதோ....



      இந்தக் கட்டுரைக்கு அரசு செவி சாய்க்குமா?என வினவியவர்களுக்கான விளக்கமும் இதோ...

      ஆம்.இந்தக் கட்டுரை நிச்சயம் அரசின் கவனத்திற்கு செல்லும் என கட்டுரைவிழியான் அன்றே பாடசாலைதெரிவித்து இருந்தது.

      (Replies

      Pada Salai8/14/2014 5:48 pm

      பல்வேறு செய்திதாள்கள் மற்றும் இணைய வழி ஊடகங்களில் வரும் தகவல்கள் அனைத்தையும் திரட்டி தருவதற்காகவே அரசில் முறையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகிறார்கள். மேற்கண்ட கட்டுரையில் பாதிக்கப்பட்ட வாசகர் ஒருவர் எண்ணங்களை வெளியிட்டுள்ளோம். எனவே இத்தகைய கட்டுரைகள் தங்களை அடைந்ததை போலவே கல்வியாளர்கள் வழியாக அரசையும் அடையும்! மாற்றம் வரும்! என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே வெளியிட்டுள்ளோம். மாற்றம் வரும் என நாம் நம்புகிறோம். நீங்களும் நம்புகிறீகளா?)



      நாம் வெளியிட்ட கட்டுரையில் இடம் பெற்ற அதே தகவலை இன்று தமிழக அரசியல் தலைவர்களுள் ஒருவரான Dr.இராமதாஸ் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.( link -http://www.padasalai.net/2014/08/tet_17.html) அரசு பள்ளிகளில் நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களில் வெறும் 772 பேர் மட்டுமே தமிழாசிரியர்கள் ஆவர். ஆங்கிலப் பாடத்திற்கு 2822 பேரும், வரலாற்றுப் பாடத்திற்கு 3592 பேரும், அறிவியல் பாடத்திற்கு சுமார் 2,000 பேரும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர். ஆனால், தமிழ் பாடத்திற்கு மட்டும் மிகக் குறைந்த அளவில் 772 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இது இப்போது நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையில் வெறும் 7.21% மட்டுமே.)



      இதன் மூலம் பாடசாலை வெளியிட்ட கட்டுரை இன்று அரசியல் தலைவர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.மேலும் இத்தகவல் அரசின் கவனத்திற்கு செல்லும் காலம் வெகு தூரம் இல்லை என்பதை நாம் உணர முடியம்.இதன் வாயிலாக தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிக்கும் என்பதையும் உணர முடிகிறது.அவ்வாறு தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிக்கும் பட்சத்தில்,தமிழ் ஆசிரியர்கள் அனைவரும் பாடசாலை இணையத்திற்கு என்றென்றும் நன்றி கடன் பட்டிருப்போம்....



      பாடசாலை-க்கு நன்றியுடன் R.சத்யா

      Delete
    2. Excellent job...All the best mam...

      Delete
    3. வாழ்த்துக்கள். !!

      Delete
    4. அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களில் பலர் அஞ்சல் வழியில் B.A. TAMIL AND B.ED படித்துவிட்டு பதவிஉயர்வில் பட்டதாரி ஆசிரியராகின்றனர். வரலாறு, அறிவியல் ஆசிரியர்கள் அதிக அளவில் ஒய்வு பெறுவதாலும் அந்த பாடங்களுக்கு அதிக ஆசிரியர்கள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

      Delete
    5. This comment has been removed by a blog administrator.

      Delete
  2. 14.08.14 அன்று நமது பாடசாலை தளத்தில் தமிழ் ஆசிரியர் நியமனம் தொடர்பான கட்டுரை ஒன்றை வெளியிட்டேன்.(link)முதலில் அந்தக் கட்டுரை வெளியிட அனுமதி அளித்தப் பாடசாலை தளத்திற்கு எனது மற்றும் தமிழ் ஆசிரியர்கள் சார்பாக கோடான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



    காரணம் இதோ....



    இந்தக் கட்டுரைக்கு அரசு செவி சாய்க்குமா?என வினவியவர்களுக்கான விளக்கமும் இதோ...

    ஆம்.இந்தக் கட்டுரை நிச்சயம் அரசின் கவனத்திற்கு செல்லும் என கட்டுரைவிழியான் அன்றே பாடசாலைதெரிவித்து இருந்தது.

    (Replies

    Pada Salai8/14/2014 5:48 pm

    பல்வேறு செய்திதாள்கள் மற்றும் இணைய வழி ஊடகங்களில் வரும் தகவல்கள் அனைத்தையும் திரட்டி தருவதற்காகவே அரசில் முறையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகிறார்கள். மேற்கண்ட கட்டுரையில் பாதிக்கப்பட்ட வாசகர் ஒருவர் எண்ணங்களை வெளியிட்டுள்ளோம். எனவே இத்தகைய கட்டுரைகள் தங்களை அடைந்ததை போலவே கல்வியாளர்கள் வழியாக அரசையும் அடையும்! மாற்றம் வரும்! என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே வெளியிட்டுள்ளோம். மாற்றம் வரும் என நாம் நம்புகிறோம். நீங்களும் நம்புகிறீகளா?)



    நாம் வெளியிட்ட கட்டுரையில் இடம் பெற்ற அதே தகவலை இன்று தமிழக அரசியல் தலைவர்களுள் ஒருவரான Dr.இராமதாஸ் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.( link - அரசு பள்ளிகளில் நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களில் வெறும் 772 பேர் மட்டுமே தமிழாசிரியர்கள் ஆவர். ஆங்கிலப் பாடத்திற்கு 2822 பேரும், வரலாற்றுப் பாடத்திற்கு 3592 பேரும், அறிவியல் பாடத்திற்கு சுமார் 2,000 பேரும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர். ஆனால், தமிழ் பாடத்திற்கு மட்டும் மிகக் குறைந்த அளவில் 772 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இது இப்போது நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையில் வெறும் 7.21% மட்டுமே.)



    இதன் மூலம் பாடசாலை வெளியிட்ட கட்டுரை இன்று அரசியல் தலைவர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.மேலும் இத்தகவல் அரசின் கவனத்திற்கு செல்லும் காலம் வெகு தூரம் இல்லை என்பதை நாம் உணர முடியம்.இதன் வாயிலாக தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிக்கும் என்பதையும் உணர முடிகிறது.அவ்வாறு தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிக்கும் பட்சத்தில்,தமிழ் ஆசிரியர்கள் அனைவரும் பாடசாலை இணையத்திற்கு என்றென்றும் நன்றி கடன் பட்டிருப்போம்....



    பாடசாலை-க்கு நன்றியுடன் R.சத்யா

    ReplyDelete
    Replies
    1. அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களில் பலர் அஞ்சல் வழியில் B.A. TAMIL AND B.ED படித்துவிட்டு பதவிஉயர்வில் பட்டதாரி ஆசிரியராகின்றனர். வரலாறு, அறிவியல் ஆசிரியர்கள் அதிக அளவில் ஒய்வு பெறுவதாலும் அந்த பாடங்களுக்கு அதிக ஆசிரியர்கள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

      Delete
    2. இந்த ஆண்டு கணித ஆசிரியர்கள் அதிகம் ஒய்வு பெற உள்ளனர். எனவே அடுத்த தேர்வில் கணித ஆசிரியர்கள் அதிகம் தேர்வாக வாய்ப்பு உள்ளது.

      Delete
  3. Nandri ramadass sir. tamzhai virupathodu padipavargalin enninkkai indha 7.21 % mattume ulla velaivaippal nichyam kuraiyum.

    ReplyDelete
  4. Vijaya kumar chenni sir case antu mudivuku varum.5percentage relaxation casem go casem final hearing annaku sir.please reply.

    ReplyDelete
  5. இரண்டாம் கட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப்பட்டியல் வரும் வெள்ளிக்கிழமைக்குள் வெளியிட இருப்பதாகவும் குறைந்த பட்சம் 850 பணியிடங்கள் உள்ளதாக தகவல் வருகிறது.....

    ReplyDelete
    Replies
    1. இரண்டாம் கட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப்பட்டியல் உண்மையாக உள்ளதா சார்

      Delete
  6. mr.Rajalingam sir sure ah scnd list varumgala? then post increase aaga vaaippu irukkungala? plz tell sir

    ReplyDelete
    Replies
    1. Uruthiya varum sir....Department meeting-la pesi mudivu pannirukkanga sir....
      Coming week end confirm-a varum...

      Delete
    2. All subject Only 850 posting thana sir......increase aga vaaipu iruka sir

      Delete
    3. Aama sir....coming weekend paper 1 notification and BT second selection list varumam sir...

      Delete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  10. இரண்டாம் கட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப்பட்டியல் உண்மையாக உள்ளதா சார்

    ReplyDelete
  11. கேஸ் போட யாரும் போகாதீங்க பணம் பறிக்கும் வழிகளில் இதுவும் ஒரு தொழிலாக தற்போது நடைமுறையில் உள்ளது . போராட்டம் , உண்ணாவிரதம் , மனு கொடுப்போம் என்ற போன்ற பல trb office ல் , வள்ளுவர் கோட்டம், போன்று இடங்களில் ஒன்று கூடுவோம் என்ற வார்த்தைகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் இது என் அனுபவம் . அனைவரும் விழிப்புணர்வு பெறவே இதை கூறினேன் . தவறான நோக்கத்தில் அல்ல .

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive