பிறப்பு, இறப்பு பதிவு தாமதம்: புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?
1.பிறப்பு மற்றும் இறப்புகள் பதிவுச் சட்டம், 1969-ல் திருத்தம் செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு.
2.நிகழ்வு நடந்த 1 ஆண்டுக்கு மேல், 2 ஆண்டுகளுக்குள் பதிவு செய்ய வேண்டுமெனில், மாவட்ட ஆட்சியர், துணை மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாக நடுவரின் உத்தரவு அவசியம்.
3.2 ஆண்டுகளுக்கு மேல் தாமதமான பதிவுக்கு முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்திரேட்டின் உத்தரவு கட்டாயம்.
4.இரு சூழல்களிலும், பிறப்பு அல்லது இறப்பு விவரங்களின் உண்மைத்தன்மையை சரிபார்த்த பிறகே பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும்.
5.தாமதப் பதிவுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும்.
பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். மேற்கண்ட விதிகள் தாமத பதிவுக்கு பொருந்தும்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...